உருக்கிய பொன் மஞ்சள்
அந்தி அடிவானச் சிவப்பு
ஊடே -
ஆயிரம் கைகளை
ஆகாயத்தில் உயர்த்தி
கண்ணுக்குச் சிக்காத
காற்றுக் காதலியுடன்
நெளிந்து கூடிக்களித்து
ஆடுகிறான் அக்னி!
ஆடுகிறான் அக்னி!
அவளே அவனை
ஊதிப் பெருக்கி
ஆட்டுவிக்கிறாள்.
சருகோ
தழல் தன்னையே
தழுவுவதாயெண்ணி
பரவசமாய் கருகிச்
சாம்பலாகி உதிர்கிறது.
இது எதுவுமே அறியாமல்
ஆங்கோர் விட்டில்
சுற்றிச் சுற்றி
சுழன்று பறக்கிறது.
-பிரகாஷ் சங்கரன்.
உண்மை.
ReplyDelete