Saturday, July 23, 2011

சொல் அன்றேல் கொல்

என்னுடல் முழுதும் செவியாயுரு மாறிட
உன் செவ்விதழ் வாய்திறவாதோ - அதிற்
செந்தமிழ்ச் சொல் பிறவாதோ...?

உறைந்து கிடக்குமென் உயிரொளி பெற்றிட
அஞ்சன இமை மலராதோ - உன்
சுடர்விழி எனை நோக்காதோ...?

போதமழிந்து நான் காலம் மறந்திட
காதல் செய்திடலாதோ - மென்விரல்
நானம் தாண்டியென் மேனியை தீண்டிடலாதோ..?

சமன்பிறழ்ந்தென்மனம் சந்நதங் கொள்ளுமுன்
சம்மதமெனச் சிறுநகைக்குறி காட்டிடுவாயோ - அன்றேலென்
சவமவிந் தடங்கிடக் காண்பாயோ...?

-பிரகாஷ் சங்கரன்.

No comments:

Post a Comment

உங்கள் எண்ணங்கள், விமர்சனங்களைப் பகிர்ந்துகொள்ள...