இறுதிக் கூத்து
பின்னர் தொட்டிலில்
பருவத்தே கட்டிலில்
என் வெற்றிகளில்
அடுத்தவர் தோல்விகளில்
எதிர்த்தவன் தலைமீதெல்லாம்
மிதித்துக் கூத்தாட்டம்
கட்டித் தூக்கிவந்து
சுடலை நெருப்பிலிட
நான் நான் நான்
என்று
எரிந்தபடி எழுந்தேன் ஆட
அடங்கின என் கால்கள்
வெட்டியானின் தடிக்கு.
------------------------------------------------
நீர்க்கடன்
முழுதும் நீராலானது
என் கிரகம்
இருளாக
அமைதியாக
எப்போதும் உறக்கமாக
என் கிரகம்
எனக்கு மட்டுமாக...
ஏதோ விளிகேட்டு
எட்டி உதைத்ததில்
ஏகாந்தமும்
அமைதியும்
உறக்கமும் தொலைத்து
கால்பங்கு நிலமுள்ள
கிரகத்தில் விழுந்தேன்
உச்சியில் வைரங்கள் மிதக்கும்
அந்தியில் பொன் உருகியோடும்
இந்த நதிக்கரையில்
காத்திருக்கிறேன்...
அஸ்தி கரைக்கப்பட்டு
என் நீர்க்கிரகம்
மீளும் நாளுக்கு.
- பிரகாஷ் சங்கரன்.
Good one.. Love.. love.. bow to yu..
ReplyDeleteLove , love.. bow to you.. Prakash..
ReplyDelete@ Indian Valves மிக்க நன்றி நண்பரே..
ReplyDelete