Sunday, September 25, 2011

அந்திக் கவிதைகள்


இறுதிக் கூத்து

கருவுக்குள் கால் உதைத்து
தொடங்கியதென் ஆட்டம்

பின்னர் தொட்டிலில்
பருவத்தே கட்டிலில்
என் வெற்றிகளில்
அடுத்தவர் தோல்விகளில்
எதிர்த்தவன் தலைமீதெல்லாம்
மிதித்துக் கூத்தாட்டம்

கட்டித் தூக்கிவந்து
சுடலை நெருப்பிலிட
நான் நான் நான் 
என்று
எரிந்தபடி எழுந்தேன் ஆட

அடங்கின என் கால்கள்
வெட்டியானின் தடிக்கு.

------------------------------------------------

நீர்க்கடன்

முழுதும் நீராலானது 
என் கிரகம்

இருளாக
அமைதியாக
எப்போதும் உறக்கமாக 
என் கிரகம் 
எனக்கு மட்டுமாக...

ஏதோ விளிகேட்டு
எட்டி உதைத்ததில்

ஏகாந்தமும் 
அமைதியும்
உறக்கமும் தொலைத்து
கால்பங்கு நிலமுள்ள
கிரகத்தில் விழுந்தேன்

உச்சியில் வைரங்கள் மிதக்கும்
அந்தியில் பொன் உருகியோடும்
இந்த நதிக்கரையில்
காத்திருக்கிறேன்...

அஸ்தி கரைக்கப்பட்டு
என் நீர்க்கிரகம்
மீளும் நாளுக்கு.


- பிரகாஷ் சங்கரன்.

3 comments:

  1. Good one.. Love.. love.. bow to yu..

    ReplyDelete
  2. Love , love.. bow to you.. Prakash..

    ReplyDelete
  3. @ Indian Valves மிக்க நன்றி நண்பரே..

    ReplyDelete

உங்கள் எண்ணங்கள், விமர்சனங்களைப் பகிர்ந்துகொள்ள...